கடலூர் முந்திரி ஆலைத் தொழிலாளர் கொலை வழக்கு - 5 ஊழியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

0 3288

கடலூரில், முந்திரி ஆலைத்தொழிலாளர் கோவிந்தராஜ் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 ஊழியர்களை முந்திரி ஆலைக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றிய கோவிந்தராஜன் என்பவரின் மரணம் தொடர்பாக எம்.பி ரமேஷ் மற்றும் அவரது ஊழியர்கள் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 5 ஊழியர்களையும் ஒரு நாள் விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, அவர்களை சிபிசிஐடி போலீசார் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டிருந்த முந்திரி ஆலைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments